பிறந்த நாள் ஜேசுவின் பிறந்த நாள் என்னை தேடி ஒரு தெய்வம் மண்ணில் மனிதன் ஆனதே மகிழ்ந்திடுவோம் நாங்கள் கொண்டாடுவோம் உலகத்தின் அரசன் பிறந்துள்ளார் ஏழ்மை வடிவில் பிறந்துள்ளார் பலகோடி ஆண்டுகள் எதிர்பார்க்கபட்ட மானிட மகன் பிறந்துள்ளார் கோடி நட்சத்திரங்கள் ஒளிந்திட ஒளியின் மகன் பிறந்துள்ளார் மகிழ்ந்திடுவோம் நாங்கள் கொண்டாடுவோம் வாசகர்களுக்கு பிறக்கும் இயேசு பாலன்
வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, தீபாவளியன்று நவீன செயற்கை கோள்வாயிலாக எடுக்கப்பட்ட இந்திய வரைபடத்தினை வெளியிட்டது. கடந்த நவம்பர் 12-ம் தேதி தீபாவளியன்று எடுக்கப்பட்ட படம் பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியாயின. இதில் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் இந்துக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியும் விளக்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்தது துல்லியமாக தெரிந்தது.இவற்றை தவிர இந்தியாவை ஒட்டியுள்ள பக்கத்து நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளின் வரைபடங்களும் இவற்றின் எல்லைப்பகுதிகளும் துல்லியமாக காட்சியளித்தன.இது அண்மைய செய்தி .
இப் படத்தின் மூலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதபட்ட வேத வசனம் உண்மை விஞ்ஞான ரீதியாக நிரூபனம் ஆகின்றது. மனிதக் கைகளால் ஆன செயற்கை கோள்வாயிலாக இவ்வளவு செய்ய முடியும் போது இறைவனுக்கு ''படைப்பு எதுவும் கடவுளுடைய பார்வைக்கு மறைவாய் இல்லை. அவருடைய கண்களுக்கு முன் அனைத்தும் மறைவின்றி வெளிப்படையாய் இருக்கின்றன.'' என்ற வசனம் உண்மை என்பது நிரூபணம் ஆகின்றது
எபிரே. 4:12-13
சகோதர,சகோதரிகளே, கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது ஆற்றல் வாய்ந்தது: இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது: ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது: எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது: உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீரதூக்கிப் பார்க்கிறது. படைப்பு எதுவும் கடவுளுடைய பார்வைக்கு மறைவாய் இல்லை. அவருடைய கண்களுக்கு முன் அனைத்தும் மறைவின்றி வெளிப்படையாய் இருக்கின்றன. நாம் அவருக்கே கணக்குக் கொடுக்கவேண்டும். மும் தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
எனது இந்த வியாதிக்கு காரணம் என்ன ? எனது பாவமா? அல்லது எனது முன்வினை பயனா ? இறைவன் என்னை கைவிட்டு விட்டாரா? என பல விதமான கேள்விகள் உங்கள் மனதில் தொன்றலாம்.</
தந்தை பால்றோபின்சன் அவர்கள் இலங்கை தமிழ் கதோலிக்க ஒரு தேவமனிதர் இவரது பங்கு மட்டக்களப்பில் உள்ள தேத்தாதீவு வில் உள்ளது இவரது செய்திகளை பாடல்களை இத்தளத்தில் நீங்கள் காணலாம்.http://frpaulrobinson.tamilgoodnews.com/ தந்தை பால்றோபின்சன் வல்லமை கீதங்களஇல் இருந்து பாடல் என் பாவம் நினைத்து புலம்பி நான் அழுகின்றேன்!
என் பாவம் நினைத்து புலம்பி நான் அழுகின்றேன்! கண்ணீரால் நிரம்பி உம் பாதம் நனைக்கின்றேன்... கூந்தலால் துடைக்கின்றேன்.....
என் பாவம் நினைத்து புலம்பி நான் அழுகின்றேன்! கண்ணீரால் நிரம்பி உம் பாதம் நனைக்கின்றேன்... கூந்தலால் துடைக்கின்றேன்.....
மன்னியும் தேவா! என் பாவம் மன்னித்தருளும்.. மன்னியும் தேவா! என் பாவம் மன்னித்தருளும்..
என் பாவம் நினைத்து புலம்பி நான் அழுகின்றேன்! கண்ணீரால் நிரம்பி உம் பாதம் நனைக்கின்றேன்... கூந்தலால் துடைக்கின்றேன்.....
அயலானின் சொத்தை நான் அபகரித்தேன்... அடுத்தவன் நாமத்தை பழுதாக்கினேன்.... அயலானின் சொத்தை நான் அபகரித்தேன்... அடுத்தவன் நாமத்தை பழுதாக்கினேன்....
பாவஅறிக்கை நான் செய்யவில்லை... பாவி உன் அன்பை மறந்தேனையா! பாவஅறிக்கை நான் செய்யவில்லை... பாவி உன் அன்பை மறந்தேனையா!
மன்னியும் தேவா! என் பாவம் மன்னித்தருளும்.. மன்னியும் தேவா! என் பாவம் மன்னித்தருளும்..
என் பாவம் நினைத்து புலம்பி நான் அழுகின்றேன்! கண்ணீரால் நிரம்பி உம் பாதம் நனைக்கின்றேன்... கூந்தலால் துடைக்கின்றேன்.....
ஆசை என் ஆன்மாவை அழிக்கின்றது... அனுதினம் தீமையை நினைக்கின்றது.. ஆசை என் ஆன்மாவை அழிக்கின்றது... அனுதினம் தீமையை நினைக்கின்றது..
களவு பொய் காமம் என்னில் நிறைந்துள்ளது.... பாவி உன் அன்பை மறந்தேனையா! களவு பொய் காமம் என்னில் நிறைந்துள்ளது.... பாவி உன் அன்பை மறந்தேனையா!
மன்னியும் தேவா! என் பாவம் மன்னித்தருளும்.. மன்னியும் தேவா! என் பாவம் மன்னித்தருளும்..
என் பாவம் நினைத்து புலம்பி நான் அழுகின்றேன்! கண்ணீரால் நிரம்பி உம் பாதம் நனைக்கின்றேன்... கூந்தலால் துடைக்கின்றேன்..... கூந்தலால் துடைக்கின்றேன்
கைலாச மகரிஷியை பார்க்க வேண்டுமென்றால் இமயமலைக்குத்தான் போக வேண்டும். அங்க தான் இருக்கிறார். அவரை முதலில் பார்த்து அவர் சொன்ன காரியங்களை புத்தகமாக எழுதியது சாது சுந்தர் சிங். சாது சுந்தர் செல்வராஜும் அதை revise பண்ணி தற்போது எழுதியிருக்கிறார்.
கைலாச மகரிஷியின் வாழ்க்கை வரலாறு
இவர் எகிப்திலுள்ள அலெக்சாண்டிரியா பட்டணத்தில் 1594 ஆம் ஆண்டு ஒரு தீவிரமான முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தார். முகமது நபியை தீவிரமாக பின்பற்றுபவராக வளர்க்கப்பட்டிருக்கிறார். நல்ல ஆவிக்குரிய ஞானம் வரும்படியாக, தனது 30 ம் வயதில் உலகத்தைத் துறந்து, துறவிபோல் வாழ்ந்து , இரவும் பகலும் தியானத்திலே கழித்திருக்கிறார்.ஆனாலும் அவர் ஆத்துமாவில் கொஞ்சமும் அமைதியோ, சந்தோஷமோ உண்டாகவில்லை. இப்படி ஆத்தும வருத்தத்தோடு இருக்கையில், ஒரு நாள் ஒரு கிறிஸ்தவ ஊழியர் இந்தியாவிலிருந்து பிரசங்கம் பண்ண எகிப்து வந்திருப்பதாகக் கேள்விப்பட்டு,அவரைப் பார்க்க வேண்டும் என்று மிகவும் விருப்பப்ட்டு பெஞ்சில் அமர்ந்திருக்கையில், எதிர்பாராத விதமாக அந்த பரிசுத்தவான் இவர் முன் தோன்றியிருக்கிறார்.
அவர் இயேசு கிறிஸ்து பற்றி எடுத்து சொல்லி, அவர் இரட்சகர், பாவங்களை மன்னிக்கிறவர், வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களுக்கு இளைப்பாறுதல் தருகிறவர் என்று சில நாட்கள் சத்தியம் சொல்ல, அதைக் கேட்டு, இவர் உள்ளம் இயேசு கிறிஸ்துவின் மேல் இழுக்கப்பட்டு, அவரை இரட்சகராக ஏற்றுக் கொண்டிருக்கிறார். ஏற்றுக் கொண்டவுடன் இவர் ஆத்துமா சொல்லி முடியாத சந்தோஷத்தாலும், சமாதானத்தினாலும் நிரம்பி வழிந்திருக்கிறது. இந்த சந்தோஷம் பிறருக்கும் கிடைக்க வேண்டும், பிறகுக்கு சுவிசேஷம் அறிவிக்க வேண்டும் என்று அவர் உள்ளம் பற்றி எரிந்ததால், தனக்கு ஆண்டவரைப் பற்றி சொன்ன பரிசுத்தவானோடு இணைந்து ஊழியம் செய்யும்படி அவருடன் சேர்ந்து கொள்கிறார்.
மகரிஷியை ஆண்டவருக்குள் நடத்திய அந்த பரிசுத்தவான் பெயர் எர்னாஸ் (Yernaus). இவர் பரிசுத்த ஃப்ரான்சிஸ் சேவியரின் (St Francis Xavier 1506-1552) நெருங்கிய உறவினராவார்.எர்னாஸ் இரட்சிக்கப்பட்டவுடன் தன் மாமா ஃப்ரான்சிஸ் சேவியரைப் போல உலகமெங்கும் சென்று சுவிசேஷம் அறிவித்து வந்தார். இவர் இந்தியாவில் பல வருடங்கள் தங்கி ஊழியம் செய்தார். இவர் பேரரசர் அக்பர்(1556-1605), இன்னும் பல பெரிய மதத்தலைவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்.மன்னர் கான்ஸ்டாண்டைன் காலத்து கிரேக்க மொழியிலான தோல் சுருளில் எழுதப்பட்ட வேதம், ஃப்ரான்சிஸ் சேவியரிடமிருந்து, எர்னாஸுக்கு வந்து அவர் தன் கடைசிக் காலத்தில் தன் சீடனான மகரிஷிக்கு கொடுத்துச் சென்றார்.
எர்னாஸுடன் பல வருடங்கள் இணைந்து ஊழியம் செய்த மகரிஷியை, ஆவியானவரின் நடத்துதல் படி தனியே பிரிந்து போய் ஊழியம் செய்யும்படி குரு எர்னாஸ் வலியுறுத்த, அவரும் அப்படியே அடுத்த 75 வருடங்கள் பல ஊர், பல நாடுகள் சுற்றித் திரிந்து ஊழியம் செய்திருக்கிறார். அதனால் அவ்ருக்கு 21 மொழிகள் சரளமாக பேசத் தெரியும். 105 வயதானபோது, முன்போல் தீவிரமாக அலைந்து ஊழியம் செய்ய சரீரம் இடங்கொடுக்காததால், எஞ்சியுள்ள வாழ்நாட்களை ஓரிடத்தில் தங்கி ஜெபத்தில் கழிக்கலாம் என்று நினைத்து, அவர் ஊழியம் செய்யும்போது அவரை கவர்ந்த அழகான, அமைதியான கைலாய பர்வதம் (இமயமலை) ஞாபகம் வர அங்கே வந்து ஒரு குகையில் தங்கி அங்கிருக்கும் மூலிகைகள், கீரை, பழங்களைத் தின்று வாழ்ந்திருக்கிறார்.குளிர்காலத்தில் கரடிகள் குகைக்குவர இவரும் கரடிகளும் ஒன்றாய் படுத்துக்கொள்வார்களாம்! இப்படியே சில வருடங்கள் போக,எடுத்துக் கொள்ளும்படி ஆண்டவரை நோக்கித் தீவிரமாக ஜெபிக்க, ஒரு நாள் செட்டைகள் அடிக்கும் சத்தம் கேட்டிருக்கிறது. இவரது ஆன்மீகக் கண்கள் திறக்கப்ப்ட, பல தேவ தூதர்கள் இவர் இருந்த குகைக்கு இறங்கி வருவதைக் கண்டிருக்கிறார், பின்னால் இயேசு கிறிஸ்துவும் வந்திருக்கிறார். அவர் சொன்னது - 'மகனே, என் வருகை சீக்கிரத்தில் சம்பவிக்கப்போகிறது. அதுவரை நீ உலகத்தில்தான் இருக்க வேண்டும். உனக்கு மரணமில்லா சரீரம் இன்றிலிருந்து அளிக்கப்படுகிறது. பாவத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட இதயமும் கொடுக்கப்படும்.சரீரம் இங்கிருக்க ஆவியில் பூமியில் எங்கும் சென்று சபையின் நிலையறிந்து மக்களுக்காக மன்றாடுவதே உன் பணி' என்று சொல்லி ஆண்டவர் மறைந்து விடுகிறார். அன்றிலிருந்து இன்றுவரை மகரிஷி அந்த வேலைதான் செய்து வருகிறார்.
அவரது பெயர் என்ன என்று சாது சுந்தர் சிங் கேட்டதற்கு, ‘ முன்பு சாதாரன மனிதனாய் இருந்த போது எனக்கு ஒரு பெயர் இருந்தது. இப்ப SIN போய் SON முழுமையாக உள்ளிருப்பதால் என் பெயர் கிறிஸ்டியன் (Christian) ’ என்று சொன்னாராம்.
__________________
மரணத்தின் பின் சம்பவிப்பது என்ன? - கைலாச மகரிஷி.
இறந்தவுடன்(ஆவி/ஆத்துமா, சரீர பந்தம் துண்டிக்கப்பட்ட) சில நிமிடங்களுக்கு ஆவிக்கு இறந்து விட்டோம் (சரீரம் இறந்து விட்டது) என்று தெரியாமல்தான் இருக்கும். இறந்தும் உயிருடன் இருக்கும் இந்த புது அனுபவம் அதற்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கும். பின் அது இரட்சிக்கப்பட்ட நல்ல ஆத்துமாவாக இருந்தால் ஒளியுள்ள பாதையை தேரிந்தெடுக்கும். பாவியான கெட்ட ஆத்துமாவாக இருந்தால் இருளான பாதையை தானாக தேர்ந்த்தெடுக்கும். நல்ல ஆத்துமாக்களை தூதர்கள் அழைத்துக் கொண்டு போய் பரலோகில் விடுவார்கள். பாவியான பொல்லாத ஆத்துமாக்களை பொல்லாத ஆவிகள் இழுத்துக் கொண்டு போய் விடும். எல்லா ஆவிகளும் எங்கும் சுற்றித் திரிய அனுமதி இருக்கிறது. பரலோகில் இருக்கும் ஆவிகள் பூலோகம் வர பிரியப்படுகிறதில்லை. பூலோகின் பாவம் அவர்களால் சகித்துக் கொள்ள முடியாது.
சில வகையான ஆவிகள் எங்கும் போக அனுமதி கிடையாது. அவர்கள் ஒரு இடத்தில் தனியே வைக்கப்பட்டு போதிக்கப்பட்டு, பின் பரலோகம் போவார்கள். அவர்கள் யாரெனில்
1. சிறு பிள்ளைகள், குழந்தைகள் - பரலோக காரியங்களை புரிந்து கொள்ளும் வயது வருவதற்கு முன் மரித்தவர்கள்.
2. மன வளர்ச்சி அற்றவர்கள்/மன நோய் உள்ளவர்கள் - இயேசு கிறிஸ்துவைப் பற்றி சொன்னாலும் இவர்களுக்கு புரியாது.
3.ஊமை, குருடு, செவிடர்கள் - இப்படிப்பட்ட உடல் நலக் குறைபாட்டால், ஆண்டவரைப் பற்றி அறிந்து கொள்ளாத முடியாதவர்கள்.
4. ஒரு முறை கூட சுவிசெஷம் கேட்காதவர்கள்/ இயேசு கிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்தவர்கள் - இவர்கள் மேசியாவின் வருகைக்காக காத்திருந்த இடம் தான் பரதீசு. ஆபிரகாமின் மடி என்று அழைக்கப்படும் இடம். 1 பேதுரு 3 : 18-22 இல் சொல்லப்பட்ட காவலிலுள்ள ஆவிகள் இவர்களே. இவர்களுக்குத் தான் இயேசு கிறிஸ்து இரட்சிப்பின் செய்தியை சொல்லி, அங்கிருந்து மீட்டு பரலோகம் அனுப்பி வைத்தார்.
அண்மையில் எனது தளத்தில் நான் எழுதிய உலகின் சமாதனம் என்ன என்பது ஈழ தமிழர் விடயத்தில் நிரூபணம் ஆகின்றது. பதிவை வாசித்தவர்கள் நான் பதிவில் கோரியபடி '' இவ் வசனத்தின் இறுதில் உலகம் கொடுக்கிறபிரகாரம் நான்உங்களுக்குக் கொடுக்கிறதில்லை என்று ஜேசு அன்று கூறியது மிக சரியனதே. உலகின் சமாதனம் என்ன என்பது ஈழ தமிழர் விடயத்தில் நிரூபணம் ஆகின்றது. எனவே சமாதானத்தின் இறைவனிடம் ஈழ தமிழர் விடயத்தில் மறைக்க பட்ட உண்மைகள் வெளிவரவும் தமிழர்கள் மன விருப்பத்தின் படி நிலையான சமாதானம் கிடைக்க வேண்டுவோம் '' அனைவரும் செபித்தமைக்கு எனது நன்றி கத்தர் தங்களது செபத்தை கேட்டு இதுவரை இலங்கை தமிழர் விடயத்தில் மறைக்க பட்ட உண்மைகள் இன்று அறிக்கையாக வெளிவந்திருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சி. தொடர்ந்து ஈழ தமிழருக்காக செபித்து வாருங்கள்
கத்தருக்கு நன்றி தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
இந்த நூற்றாண்டில் இடம் பெற்ற மிக கொடூரமான இன அழிப்பு என்றால் இலங்கை தமிழ் இன அழிப்பை குறிப்பிடலாம். தமிழ் இன அழிப்பு இடம் பெற்ற வேளை ஐநா சபையும் இந்தியாவை ஆளும் அரசும் ஏன் உலகமே வேடிக்கை பார்த்தது. போர் முடிந்தது என இலங்கை அரசு அறிவித்ததும் அனைத்து நாடுகளும் இலங்கை அரசை புகழ்ந்ததுடன் இலங்கையில் நிரந்தர சமாதானம் நிலவுகின்றது எனவும் இலங்கை தமிழர் மிக சந்தோசமாக வாழ்கின்றனர் என கூறிவருகின்றனர் .ஆனால் அங்கோ ஐந்து தமிழருக்கு ஒரு இராணுவம் என கண்காணிக்க படுவதுடன் பல அடக்குமுறை இடம்பெற்று வருவது அனைவரும் அறிந்த உண்மை . அதானால் தான் அன்று ஜேசு கூறினார்
யோவான் 14:27சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்;உலகம் கொடுக்கிறபிரகாரம் நான்உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.
இவ் வசனத்தின் இறுதில் உலகம் கொடுக்கிறபிரகாரம் நான்உங்களுக்குக் கொடுக்கிறதில்லை என்று ஜேசு அன்று கூறியது மிக சரியனதே. உலகின் சமாதனம் என்ன என்பது இலங்கை தமிழர் விடயத்தில் நிரூபணம் ஆகின்றது. எனவே சமாதானத்தின் இறைவனிடம் இலங்கை தமிழர் விடயத்தில் மறைக்க பட்ட உண்மைகள் வெளிவரவும் தமிழர்கள் மன விருப்பத்தின் படி நிலையான சமாதானம் கிடைக்க வேண்டுவோம்
சொர்கத்தின் வாசல் படி, என்ற சொல்லைக் கேட்டிருப்பீர்கள். ஆனால் அது எங்கே இருக்கிறது என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. சொர்க்கம் என்றால் அது வானத்தில் அல்லது இந்திரலோகத்தில் இருப்பதாக பலரும் கூறுவார்கள். ஆனால் பூமியில் ஒரு நரகத்தின் வாசல்படி பலகாலமாக இருக்கிறதே யாராவது அறிவீர்களா ?
ஆம் இதனை ஆங்கிலேயர், நரகத்தின் வாசல் என்று அழைக்கிறார்கள். டேக்மேனிஸ்தான் (அக்பானிஸ்தானுக்கு அருகில் உள்ள நாடு) என்னும் நாட்டில் உள்ள கராக்கும் என்னும் பாலைவனத்தில் இந்த நரகத்தின் வாசல் காணப்படுகிறது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் திடீரெனத் தோன்றிய இந்தத் துளையில்(ஓட்டையில்) இருந்து எப்போதும் தீ பிளம்பு கக்கியவண்ணம் உள்ளது. இது எரிமலை அல்ல. எப்போதும் எரிந்துகொண்டு இருக்கும் இந்த ஓட்டையின் ஆழத்தை எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. காரணம் அதனுள் எரியும் நெருப்பு ! உலகில் உள்ள அதிசயங்களில் ஒன்றாக இதனை ஏன் இன்னும் இணைக்கவில்லை என்று நினைக்கும் அளவுக்கு , இது அமைந்துள்ளது.
வாழ்க்கையில் ஏற்படும் பலவிதமான கஷ்டங்கள் துன்பங்கள் அனைத்தையும் உனக்காக அநுபவித்து உன் கூடவே வரும் ஒரே ஒரு தெய்வம் ‘நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை நான் உன்னை கைவிடுவதும் இல்லை’ (எபி.13:5).
ஜாதகம் நல்ல நேரம் ஏவல் பில்லி சூனியம் என்பவறை நம்பி வாழ்கையை இழந்தவர்கள் பலர். இந்த காரியத்தில் சில கிறிஸ்தவர்களும் ஈடுபடுகிறனர். காரணம் விசுவாச குறைவு அத்துடன் இந்துகள் மத்தியில் வாழுவதால் அவர்களை பின்பற்றுகின்றனர். எதுவாக இருந்தாலும் கிறிஸ்தவர்கள் இக்காரியங்களில் ஈடுபடுவது தேவ கோபத்தை ஏற்படுத்தும், இவை அனைத்தும் தேவனுக்கு விரோதம் ஆனவை . இக்காரியங்களை பற்றி மிக விளக்கமாக பரலோகபாதை என்னும் வலைப்பூவில் எழுதியுள்ளார். இவ் வலைப்பதிவு ஆசிரியருக்கு எனது நன்றி எனது வாழ்த்துக்கள் இதோ லிங் இங்கே
அண்மையில் எனது கை தொலைபேசி தொலைந்துபோனது. எனவே ஒரு புதிய ஒரு கை தொலைபேசியை வாங்கி அதன் இலக்கத்தை சில நண்பர்களுக்கு மட்டும் கொடுத்துவிட்டு விட்டேன். சில மாதங்களின் பின்னர் எனது சகோதரர் ஒரு விடயம் தொடர்பாக எனது புதிய கை தொலைபேசி இலக்கத்தை ஒருவரிடம் கொடுத்துவிட்டார். அவர் என்னிடம் நீண்ட நேரம் பேசினார். இறுதியில் அவரது குரல் மிகவும் பரிட்சியமாக இருந்து. எனவே அவரிடம் வினவினேன். அவரும் என்னை அடையாளம் கண்டு கொண்டார். இச் சம்பவத்தின் பின்னர் எனக்கு ஒரு வேத வசனம் நினைவுக்கு வந்தது, காரணம் அவரது குரலை வைத்தே அவரை அடையாளம் கண்டு கொண்டேன். இதோ வேத வசனம்
யோவா 10: 27 என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின் தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர்.
தேவனின் குரலை கேட்பது எப்படி ?
அன்றாடம் இடைவிடாது இறைவனிடம் இறைஞ்சி வேண்ட வேண்டும் .இதன் மூலம் உங்களது குரல் தேவனுக்கு பரிட்சியமாகும் .பின்னர் தேவனது குரல் உங்களுக்கு பரிட்சியமாகும்.நீங்களும் தேவனின் குரலை கேட்கலாம். கிறிஸ்தவர்களுக்கு வேதாகாமம் ஒரு கை தொலைபேசி போன்றது.வேதாகாமத்தை வாசிப்பதன் மூலமும் தேவனை அறிவதுடன் அவரது குரலையும் நீங்களும் கேட்கலாம். தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
அண்மையில் எனது கை தொலைபேசி தொலைந்துபோனது. எனவே ஒரு புதிய கை தொலைபேசியை வாங்கி அதன் இலக்கத்தை சில நண்பர்களுக்கு மட்டும் கொடுத்தேன். சில மாதங்களின் பின்னர் எனது சகோதரர் ஒரு விடயம் தொடர்பாக எனது புதிய கை தொலைபேசி இலக்கத்தை ஒருவரிடம் கொடுத்துவிட்டார். அவர் என்னிடம் நீண்ட நேரம் பேசினார். இறுதியில் அவரது குரல் மிகவும் பரிட்சியமாக இருந்தது. எனவே அவரிடம் வினவினேன். அவரும் என்னை அடையாளம் கண்டு கொண்டார். இச் சம்பவத்தின் பின்னர் எனக்கு ஒரு வேத வசனம் நினைவுக்கு வந்தது, காரணம் அவரது குரலை வைத்தே அவரை அடையாளம் கண்டு கொண்டேன். இதோ வேத வசனம்
யோவா 10: 27 என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின் தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர்.
தேவனின் குரலை கேட்பது எப்படி ?
அன்றாடம் இடைவிடாது இறைவனிடம் இறைஞ்சி வேண்ட வேண்டும் .இதன் மூலம் உங்களது குரல் தேவனுக்கு பரிட்சியமாகும் .பின்னர் தேவனது குரல் உங்களுக்கு பரிட்சியமாகும்.நீங்களும் தேவனின் குரலை கேட்கலாம். கிறிஸ்தவர்களுக்கு வேதாகாமம் ஒரு கை தொலைபேசி போன்றது.வேதாகாமத்தை வாசிப்பதன் மூலமும் தேவனை அறிவதுடன் அவரது குரலையும் நீங்களும் கேட்கலாம். தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
கிறீஸ்த்துவை பின்பற்றி வாழுதல் என்பது இலேசான காரியம் இல்லை என்னை போன்ற சிலர் சிறிய துன்பம் ஏற்பட்டவுடன் கிறீஸ்த்துவை விட்டு விலகி விடுவர். அப்படிப்பட்டவர்களுக்கு தேவன் எப்படி துன்பங்களை வெற்றி கொள்வது? என புனித பிரிஜித்தாவிற்கு கூறியவை. எனது பகைவர்கள் மிகக் கொடிய காட்டு விலங்குகள் போல நிறைவு பெறுவதுமில்லை ஓய்வு எடுப்பதுமில்லை. அவர்களது இதயம் எனது அன்பைப்பற்றி அறியாததால் அவர்களுக்கு எனது துயரமிக்க பாடுகள் கொஞ்சம் கூட நினைவுக்கு வருவதில்லை. அவர்களில் ஒருவரது இதயம் கூட ஒருமுறையேனும் ஆண்டவரே நீர் எங்களை மீட்டுக் கொண்டீர் உமது துயரமிக்க பாடுகளுக்காக நீர் போற்றப்படுவீராக! என்ற வார்த்தைகளை தப்பித் தவறிக்கூட கூறியதில்லை. என்மீது தெய்வீக அன்பில்லாத எதிரிகளின் இதயங்களில் என் ஆன்மா எவ்வாறு குடிகொள்ள முடியும்? இவர்கள் தங்கள் விருப்பத்திற்காக அடுத்தவர்களுக்கு எளிதாக நம்பிக்கை துரோகம் செய்கிறார்களே! அவர்களின் இதயம் உலக ஆசையெனும் வஞ்சகப் புழுக்களால் நிறைந்துள்ளது.
சாத்தான் அவனது தீமைகளை அவர்களது வாயில் வைத்துள்ளான். அதனால் என் வார்த்தைகளுக்கு எந்தவித தொடர்பும் இல்லாமல் போனது. மேலும் என் எதிரிகளை என் நண்பர்களிடமிருந்து இரம்பத்தால் அறுப்பதைப்போல அறுத்து எடுக்க வேண்டியுள்ளது. இரம்பத்தால் அறுபட்டுச் சாவதைவிட கொடுமையான சாவு வேறெதுவுமில்லை. அவர்கள் அனைத்துவித தண்டனைகளுக்கும் ஆளானவர்கள், சாத்தான் அவர்களை இரம்பத்தால் அறுப்பான் என்னிடமிருந்தும் அவர்கள் அறுபட்டுப் போவர்கள் ஆகவே இரண்டு பக்கமும் அறுபடுவார்கள். என் எதிரிகளால் அவர்களைச் சேர்ந்தவர்களும் என்னிடமிருந்து அறுபட்டுப்போவதால் அவர்கள் எனது மிகுதியான வெறுப்புக்குள்ளானவர்கள்.
இக் காரணங்களுக்காகவும் சாத்தான் எனது உண்மையான பகைவனாக இருப்பதாலும் அவனிடமிருந்து என் மக்களை பிரிப்பதற்காக நான் எனது நண்பர்களை அனுப்புகின்றேன். அவர்களை போருக்குப் புறப்படும் படை வீரர்களைப்போல அனுப்புகிறேன். தீயவற்றிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு எனக்காக தன்னுயிரைத் தருபவரே எனது உண்மையான படைவீரர். என் வாயினின்று வரும் வாரத்தைகளை அவரகள் ஈட்டியாகப் பயன்படுத்துவாரகள் அவரகளது கைகளில் நம்பிக்கை என்னும் போரவாளை வைத்திருப்பார்கள். அவர்களது மார்பு எனது அன்பு என்னும் மார்புக் கவசத்தை அணிந்து இருப்பதால் என்ன நடந்தாலும் என் மீது அவர்கள் கொண்டுள்ள அன்பு குறைந்துவிடாது. நடப்பவை அனைத்தையும் பொறுமையுடன் ஏற்றுக்கொள்ள பொறுமை என்னும் பாதுகாப்பு கவசத்தை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். தங்கத்தைப் பாதுகாப்பது போல நான் அவர்களை மூடி வைத்துள்ளேன்: இப்போது எனது வழியில் அவர்கள் முன்னேறிச் செல்ல வேண்டும்.
நீதிமுறைகளின்படி நான் மனிதனாகப் பிறந்து பாடுகளை அனுபவிக்காமல் இருந்திருந்தால் மேன்மை மிகுந்த எனது அரசாட்சியில் நானே நுழைந்திருக்க முடியாமல் போயிருக்கும். அப்படியிருக்க என் நண்பர்கள் எப்படி நுழைய முடியும்? அவர்களது ஆண்டவரான நானே துன்பத்திற்குள்ளானேன் அப்படியிருக்க அவர்கள் துன்பப்படுவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? அவர்களது ஆண்டவரான நான் சாட்டையால் அடிக்கப்பட்டேன் என்றால் அடுத்தவர் கூறும் வார்த்தைகளால் அவர்கள் அடிபடுவது ஒன்றும் பெரிதல்ல. அவர்கள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை ஏனென்றால் நான் அவர்களைக் கைவிடுவதில்லை.
சாத்தானால் கடவுளது இதயத்தை எடுக்கவோ அவரிடமிருந்து அதைப் பிரிக்கவோ இயலாது. அதைப்போலவே என்னிடமிருந்து அவன் என் மக்களைப் பிரித்தெடுக்க முடியாது. எனவே எனது பார்வையில் என் நண்பர்கள் தூய தங்கத்திற்கு ஈடானவர்கள் சிறிதளவு நெருப்பில் அவர்கள் சோதிக்கப்பட்டாலும் அவர்களை நான் கைவிடுவதில்லை அவ்வாறு சோதிக்கப்படுவது அவர்களது மேன்மைக்கான செயலாகும். காண்க http://www.prophecyfilm.com/tamil/revelations/book1/b1_chapter6.htm அவர்களை நான் கைவிடுவதில்லை
இன்று அனைத்து தமிழ் மக்களின் பார்வையும் ஜெனிவாவை நோக்கி திரும்பியுள்ளது. காரணம் தமிழன்அழியும்போது சர்வதேசம் கண்டும் காணாமல் இருந்தது தமிழன் நீதி கேட்டுப் போராடும் அழுத்தம் காரணமாக இலங்கை அரசுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை கொண்டு வரபோகின்றதாக சொல்கிறார்கள். இவர்கள் சொல்வதைப் போல செய்ய போகிறதுமில்லை அப்படியே நிறைவேற்றினாலும் இலங்கை அரசை மிரட்டி தங்களது சொந்த நலனைப் பெற்று கொள்வதற்காகதான். அதனால்தான் தமிழர் கடந்த காலத்தைப் போல் நம்பி ஏமாறாமல் ஒற்றுமையுடனும் மிகுந்த விழிப்புடனும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்
அதன் அழுத்தமே ஐக்கிய நாட்டு சபையை இப்படி பேச வைக்கிறது. இதில் இந்திய அரசின் பங்கை தமிழர் எதிர் பார்க்கவில்லை அவர்கள் வழமை போலவே கழுத்தறுத்து விடுவர். சிலவேளை இலங்கை அரசை எதிர்த்து வாக்களிகலாம் அது சர்வதேசத்தில் தமிழர்களின் போராட்டத்தினால் அன்றி வேறு இல்லை. இந்திய மத்திய அரசானது தாங்கள்தான் தமிழரின் பாதுகாவலர் போல பிரச்சாரம் செய்யலாம். ஆனால் தமிழர்கள் எளிதில் பழைய அனுபவத்தை மறக்கமாட்டார்கள், ஏமாறவும் மாட்டார்கள், தமிழ் ஈழம் கிடைக்க என்னதான் வழி ? நான் அண்மையில் வாசித்த குறிப்பு என்னை சிந்திக்க வைத்தது எனது சிந்தனையில் பட்டத்தை உங்களுடன் பகிந்து கொள்கின்றேன் இது நிறைவேறுமா எனக் கேட்டால் எனக்குத் தெரியாது ஆனாலும் இந்த வழியிலும் முயற்சிப்பது நல்லது என நினைக்கிறேன் இந்த நூற்றாண்டின்சித்தர் என அழைக்கப்படும்யோகிராஜ் வேதாத்திரி மகரிஷிஅருளிய தத்துவக் குறிப்பு;
''நமது ஐவகைக் கடமைகளில் கடைசியில் வரும் உலகக் கடமையினை ஆற்றுவதில் முடிந்த வரையில் மிகுதியான அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். பொருளிலோ, செல்வாக்கிலோ, உடல் கட்டிலோ போதிய வலிவு இல்லாத நாம் எப்படி உலக நலக் கடமையினை ஏற்று ஆற்ற முடியும் என்று எவரும் மலைக்கவோ, சோர்வுறவோ வேண்டாம்.
உங்களிடம் தவத்தால் உறுதி பெற்ற மனோ வலிவு இருக்கிறது. உலக நலத்திற்காக உங்கள் விருப்பத்தைச் சங்கற்பமாக்கிப் பல தடவை உள்ளுக்குள் ஒலித்துக் கொள்ளுங்கள். சிதாகாசமாக இயங்கும் உங்கள் உயிராற்றலிலிருந்து கிளம்பும் அந்த உயர்ந்த நினைவு அலை மகாகாசம் என்ற பேரியக்கத் தொடர்கள் உயிரோடு கலந்து அந்த விருப்பம் நிறைவேற வழிவகுத்துக் கொள்ளும்.
உங்கள் கடமைகளில் ஒன்றாக நாள்தோறும் "வாழ்க வையகம்" என்ற மந்திரத்தைப் பத்து தடவையாகிலும் நமது உடன் பிறந்தவர்களாகிய உலக மக்கள் அனைவரையும் விரிவாக நினைந்து ஒலித்துக் கொண்டிருங்கள்.
அன்பர்கள் பலருடைய இத்தகைய எண்ண உறுதி செயல்படுத்துவதற்காக எந்த நாட்டிலோ, ஒரு வெற்றி வீரனைப் பிறக்கச் செய்யலாம். அல்லது இப்போது உள்ள உலக நல நாட்டம் கொண்ட ஒருவரையோ, பலரையோ உலக நலத் தொண்டில் முழுமையாகத் திருப்பிவிடலாம். பேரியக்கத் தொடர் களத்தில் அத்தகைய மாபெரும் ஆற்றல் அடங்கியுள்ளது.''
இந்த தத்துவ குறிப்பின்படி உடல் கட்டிலோ வலுவிலோ அல்ல சங்கற்பமாக்கிப் பல தடவை உள்ளுக்குள் ஒலிபதில் வெற்றி தங்கியுள்ளது ஒருவேளை நீங்கள் இந்த கலையை கற்றிருந்தால் உங்களது தியான வேளையில் தமிழ் ஈழம் விரைவில் கிடைக்கவேண்டும் வாழ்கவளமுடன் என மூன்று தடவை சொல்லவும் .எனவே தாமதிக்காது இன்றே தொடங்குங்கள் .
இந்தப் பதிவானது அனைத்துத் தமிழனும் வாசிக்க வேண்டியதொன்று ''இந்திய மதிய அரசு இலங்கைக்கு இராணுவ உதவி எதுவும் செய்யவில்லை. தமிழருக்கு மனிதாபிமான மருத்துவ உதவி மட்டுமே செய்தது'' . இக்கூற்றை பல அப்பாவி தமிழர்கள் நம்பினர். இது உண்மையா?
இராணுவத்தினர் வன்னி நோக்கி மூர்க்கத்தனமாக தாக்கி கொண்டு செல்லும் போது, புலிகள் இரணைமடுக் குளத்தின் அணையை உடைத்து இராணுவத்தினருக்கு பலத்த உயிர் சேதம் ஏற்படுத்தியது; அனைவரும் அறிந்ததே! இதில் பல நாட்டு இராணுவத்தினரும் இறந்தனர் என்பது இரகசிமல்ல, பல இந்திய இராணுவத்தினரும் கொல்லபட்டன்ர். இதனால் கோபம் அடைந்த இந்திய மதிய அரசு யாருமே செய்ய துணியாத ஒரு கிழ்த்தரமான இன அழிப்பை தமிழர் மீது கட்டவிழ்த்து விட்டது. திருகோணமலை கடற்படைத்தளத்தில் வந்திறங்கிய ஒரு தொகுதி இந்திய இராணுவ மருத்துவர்கள் மக்களுக்கு மனிதாபிமான மருத்துவ உதவி செய்வதற்காக வந்ததாக சொல்லபட்டது.அதை நம்பி சென்றவர்களின் கைகள்,கால்கள் வெட்டி அகற்றிவிட்டனர். இப்படியாக கணிசமாணவர்களை ஊனமாக்கியது இந்திய இராணுவ மருத்துவர்கள். இவர்கள் உண்மையில் வைத்தியர்களா? அல்லது கசாப்பு கடைகாரரா?(ஒய் திஸ் கொல வெறி?) இப்படியாக பல வகையிலும் தமிழ் இன அழிப்புக்கு துணை நின்றதுடன் போர் குற்ற வழக்கை இலங்கைக்கு உள்ளே நடத்தும் படி சொல்வதுடன் இலங்கை அரசுடன் ஒத்துழைக்கும் படி தமிழ் தேசிய கூட்டமைப்பை வற்புறுத்தி வருகின்றது.
புலிகளை ஒழித்து விட்டால் தமிழர்கள் போராட மாட்டார்கள் என கனவு கண்ட சர்வதேசம் புலம் பெயர் தமிழர் எழுற்ச்சியுடன் முன்னெடுக்கும் போராடம் கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன், இந்த எழுற்சியை குறைக்க இந்திய, அமெரிக்க மற்றும் மேற்குலக அரசுகள் மறுபடியும் ஒன்று சேர்ந்து சதித்திட்டம் வகுக்க தொடங்கிவிட்டனர். அதன் அறிகுறியே அடுக்கடுக்காக இலங்கைக்கு செல்வதும், இலங்கை அரசை எதிர்த்து அறிக்கை விடுவது. உறுதிமொழி. வழங்குவது என தொடர்கிறது . நல்ல உதாரணம் : கொலைஞர் தமிழகத்தில் அரை நாள் உண்ணாவிரதம் என தமிழரை நம்பவைத்து ஏமாற்றியது. தமிழர் எளிதில் மறந்து இருக்க மாட்டார்கள். இதே பாணியில் இந்திய, அமெரிக்க மற்றும் மேற்குலக அரசுகள் களம் இறங்கியுள்ளது .பல வருடங்களாக நம்பி ஏமாந்தது போதும்.எமக்கு நீதி கிடைக்கும் வரை ஒற்றுமையுடன் மிகுந்த விழிப்பாக போராடுவது ஒவொரு தமிழனின் கைகளில் தங்கியுள்ளது.
ஹ ஹ யார் அந்த சிங்கசொங்? படத்தை பாருங்கள் பதில் புரியும்
தமிழில் தோன்றிய தத்துவஞானி யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
அவர்கள் அருளியது
“எண்ணத்தை ஆராய்ச்சியிலும், தூய்மையிலும் வைத்திருப்பவன் அறிஞன், மகான், ஞானி. எண்ணம் என்பது எப்படி இயங்குகின்றது. அதிலிருந்து பல்வேறுஅகக்காட்சிகள் எப்படித் தோன்றுகின்றன என்று அடிக்கடி ஆராய்ந்து பாருங்கள்.சில நாட்களுக்குள் நீங்களும், அறிஞர்களாகவே திகழலாம். உயர்ந்த பயனளிக்கும்நோக்கத்தில் எண்ணத்தைப் பயிற்றுவிப்பது சிறந்தது. பல களங்கங்களைப் போக்கி, நல்ல நிலையில் எண்ணத்தைத் தூய்மையாக வைத்திருக்க அப்பயிற்சி உதவும். தன்உருவ நினைவு, அறிவில் தெளிந்த பெரியோரின் உருவ நினைவு இவை எண்ணத்தில் நிலைபெறப் பழகுவது மனிதனை வாழ்வில் சிறப்படையச் செய்யும்”.
எண்ணத்தின் அளவையொட்டியே மனதின் தரமும், உயர்வும் அமைகின்றன. மனதின்அளவில்தான் மனிதனின் தரமும், உயர்வும் உருவாகின்றன. எனவே, எண்ணத்தைப்பண்படுத்த வேண்டும். எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும். எப்படி? எண்ணத்தைக்கொண்டு தான் எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்தின் தன்மையைப்பயன்படுத்தித் தான் எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும்.
தூய்மையான நல் எண்ணங்களை மேற்கொண்டால் உங்களிடமிருந்து இனிய அதிர்வுகள்புறப்பட்டு வெளியேறிப் பரவுகின்றன. அதே போன்று நீங்கள் ஒருவரை வாழ்த்தநினைக்கும் பொழுது உங்களை அறியாமல் நீங்களே முதலில் உங்களால் வாழ்த்தப்படுகின்றீர்கள்! வாழ்த்து உங்கள் மனதில் ஆழப் பதிந்து விடுகின்றது.
அதுபோலவே நீங்கள் ஒருவருக்குத் தீமை நினைத்துச் சபிக்கும் பொழுதுமுதலில் உங்களை நீங்களே கெடுவதற்குச் சபித்துச் கொள்கிறீர்கள். உங்களிடம்முதலில் தீமை வித்து உங்களிடம் ஊன்றிப் பிறகு மற்றவர்களுக்குப்பருவுகின்றது. இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
இதற்கு உதாரணமாகக் கோபம் ஏற்படும் போது உண்டாகும் நிலையினைச்சொல்லலாம். கோபம் முதலில் உங்கள் உடலுக்கும், மனதிற்கும் பாதிப்புச்செய்துவிட்டுத் தான் மற்றவரைச் சென்று தாக்கும் என்பதை நீங்கள்அனுபவத்தில் உணர்ந்திருக்கலாம்.
நீங்கள் மற்றவர்களை வாழ்த்த ஆரம்பிக்கும்பொழுது நல்ல அலைகளைஏற்படுத்தி உங்கள் குணத்தை வளப்படுத்துகிறீர்கள். உங்களுடைய வாழ்த்துமற்றவரிடம் மோதித் திரும்புகிறது. சிதறுகிறது, ஊடுருவிச் செல்கிறது.
நீங்கள் யாரை வாழ்த்துகிறீர்களோ அவரை முடிவில் சென்றடைகிறது. இந்தமுறையில் வாழ்த்து உங்களுக்கும் நீங்கள் வாழ்த்துகின்ற மனிதருக்கும் இடையேமட்டுமல்லாமல் அந்த இனிமையான அலைகள் மனித சமுதாய முழுதும் பரவுகின்றன.பேரியக்க மண்டலம் முழுதும் அனைத்துப் பக்கங்களிலும் சென்று நிரம்புகின்றன.
எண்ணம் வேறு, நீ வேறு அல்ல, சிந்தித்துப் பார், அது காலம், இடம், பருமன், இயக்கம் என்ற நான்கு விதத் தன்மைகளோடு இயங்கிக் கொண்டும், அவற்றைக் கடந்துமெளன நிலையடைந்தும் மாறி மாறி நிற்கும் மாயாஜாலப் பொருள். உள் எண்ணத்தின்நிலையை அறிந்து கொண்டால் நீ உன்னை அறிந்து கொண்டாய் என்பது தான் பொருள்.அது வரையில் சந்தர்ப்பங் கிடைக்கும்போதெல்லாம் எண்ணத்தைப் பற்றி ஆராய்ந்துகொண்டே இரு. எண்ணத்தை நிறுத்த முயலாதே, அது அதிகமாக அலையும், அதை அறியமுயன்றால், அப்போதுதான், அது தானே சிறுகக் சிறுக அமைதி பெறும்.
எண்ண இயக்கம் தான் வாழ்வு. அது உடலில் இரத்த ஓட்டம் இருக்கும்மட்டும், நித்திரை காலம் தவிர மீதி நேரத்தில் இயங்கிக் கொண்டே தான்இருக்கும். எண்ணத்தைப் பண்படுத்தவும் பயன்படுத்தவும் வழிகாண வேண்டும், பழகவேண்டும். அந்தப் பெருநிதியை அழிக்க வேண்டுமென்று நீ வீணான முயற்சிகொள்ளாதே! அதுதான் மரணம் என்ற இடத்தில் தானாகவே நின்று விடப் போகின்றதே!எண்ணம் நின்று விட்டால் நீ என்பது தனித்து ஏது?
பல வருடங்களில் எண்ணிறந்தோர்களால் செய்து முடிக்கக் கூடிய காரியங்களைநீ ஒரு நிமிஷத்தில் எண்ணத்தால் திட்டமிடலாம். இத்தகைய சக்தியுடைய நீஎப்போதுமே எதிர்காலத்தைப் பற்றி திட்டமிட்டுக் கொண்டிருக்காதே. இதனால்அவ்வப்போது செய்ய வேண்டிய கடமைகளை மறந்து விடுவாய். செயலோடு சிந்தனையைஇணைத்து நிற்பதே மிகவும் உயர்வாகும். அது நழுவாமல் இருப்பதற்கு விழிப்போடுபல நாட்கள் பழக வேண்டும். உனது உடல் இன்பங்களையும், குடும்பத்தையும்மட்டும் ஞாபகத்தில் கொண்டு செயலாற்றினால், உனக்கு வாழ்வில் சலிப்பும், துன்பங்களும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
இயற்கை அமைப்பை, நிகழ்ச்சிகளை, எண்ணத்தின் ஆற்றலை, சமுதாயத்தை, உலகத்தை, ஆகாயத்தில் மிதந்து உலவிக் கொண்டிருக்கும் பலகோடி அண்டங்களைஅடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள். இவைகளோடு உனது அறிவை, இன்ப துன்பஅனுபோகங்களை அடிக்கடி ஒப்பிட்டுப் பார். இதனால், உடலுக்கும், அறிவுக்கும்ஒருங்கே அமைதி தரும் இடையறாத இன்ப ஊற்றுப் பெருக ஆரம்பித்து விடும்.–